கா.பொ.இரத்தினம். சென்னை 90: தமிழ்மறைப் பதிப்பகம், எச் 12/9 கலாச்சேத்திரக் குடியிருப்பு, பெசன் நகர், 1வது பதிப்பு, ஐப்பசி 1993. (சென்னை 14: மூவேந்தர் அச்சகம், இராயப்பேட்டை).
viii, 192 பக்கம், விலை: இந்திய ரூபா 25., அளவு: 17.5×12 சமீ.
1965 முதல் இலங்கைப் பாராளுமன்றில் 18 ஆண்டுகள் உறுப்பினராகப் பணியாற்றியவர் கா.பொ.இரத்தினம். தமிழ்ப் பண்டிதரான பேராசிரியர் கா.பொ.இரத்தினம் கொழும்பு அரசினர் ஆசிரியர் கல்லூரியில் 12 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், திருக்குறள் செல்வர், தமிழ்ச்சான்றோர் போன்ற அடைமொழிகளிலும் தமிழகத்தவரால் போற்றப்படுபவர். ஈழத்து அரசியலில் இருந்து ஒதுங்கித் தமிழகத்தில் கல்வித்துறையில் பின்னாளில் பணியாற்றிவந்தவர். பண்டிதர் கா.பொ.இரத்தினம் எழுதிய 29 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ்மறையின் தனி மாண்பு, உலகத்துக்கு ஒன்று, தமிழ் மறை, புரட்சிக் களஞ்சியம், நிறைவிளக்கு, ஏர்ப்பின்னது உலகம், நாடும் நல்லாட்சியும், வெற்றிக்கு வழி, பெற்றதாய், சிறைமீட்பு, அளவைகளும் அடையாளங்களும், சுடும் சுடும் சுடும், தற்கொலை, மலரினும் மெல்லியது, நோயற்ற வாழ்வு, அறஞ்சாரா வறுமை, அறப்போரும் தமிழ்மறையும், மரங்கள், பொருளாதாரம், நோயும் தீயும், கெடும் கெடும், உன்னைக் காதலிக்கிறாயா, தீதும் உண்டோ, திருக்குறளை விளக்கும் நூல்கள், ஒரு குறளில் முப்பால், திருவள்ளுவர் தொடர் ஆண்டு, தலைமை உரை, திருவள்ளுவரிடம் செல்க, உலகத்து மக்களே வாரீர் ஆகிய தலைப்புகளில் இத்தமிழ்மறைக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 104886).