க.அருணாசலம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(6), 86 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-659-301-3.
ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றி பேராசிரியர் க.அருணாசலம் எழுதிய பின்வரும் ஏழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூலாகும். ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சி (1970-2000), புதுக்கவிதை: சில குறிப்புகள், புகலிடக் கவிதைகள்: சில குறிப்புகள், இ.முருகையனின் வெறியாட்டு (பாட்டுக்கூத்து): ஒரு சில குறிப்புகள், இ.சிவானந்தனின் கவிதைகள்: சில குறிப்புகள், தமிழோவியன் கவிதைகள்: சில குறிப்புகள், கவிதைச் சுடர் அன்பு முகையதீன் கவிதைகள்: ஒரு நோக்கு ஆகிய கட்டுரைகளே அவையாகும். க.அருணாசலம் தனது இளங்கலைமாணி, முதுமாணி, கலாநிதிப் பட்டங்களைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.