கிருஷ்ணதாசன் (ஆசிரியர்), ச.கார்த்திகேசு (பதிப்பாசிரியர்). கொழும்பு 2: அருளொளி பதிப்பகம், 31/21 டோசன் வீதி, 1வது பதிப்பு, 1971. (கொழும்பு 2: அருளொளி அச்சகம், 31/21 டோசன் வீதி).
(3), 48 பக்கம், தகடு, விலை: ரூபா 1.00, அளவு: 18×12.5 சமீ.
தமிழிலக்கியத்தில் பிரபந்த வகைகளில் ஒன்று பிள்ளைத்தமிழ். இது கடவுள், குரு, வள்ளல் முதலானவரை குழந்தையாகக் கொண்டு காப்பு முதலாகப் பத்துப் பருவங்களமைத்துப் பாடப்பெறுவதாகும். தனது ஞானதேசிகனான தவத்திரு சித்ரமுத்தடிகளை குழந்தையாகக் கொண்டு இந்த ஆண்பாற்பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை கவிமணி கிருஷ்ணதாசன் அமைத்துள்ளார். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை என்ற வருகை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்னும் பத்து உறுப்புக்களைக் கொண்டுள்ளது. அருளொளி வெளியீட்டுத் தொடரில் நான்காவது வெளியீடாக இந்நூல் அமைகின்றது. தவத்திரு சித்ரமுத்தடிகளினால் தொடக்கிவைக்கப்பெற்ற அருளொளி இயக்கத்தின் 25ஆவது ஆண்டு வெள்ளிவிழாவின்போது வெளியிடப்பெற்றது.நூலாசிரியர் கிருஷ்ணதாசன் மலேசியாவில் தைப்பிங் பிரதேசத்தில் வசித்துவருகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 87314).