மு.புஷ்பராஜன். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர்; 2013. (சென்னை 600005: மணி ஓப்செட்).
160 பக்கம், விலை: இந்திய ரூபா 125., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-82033-24-0.
எண்பதுகளில் ஈழதேசிய விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு எழுந்தபோது அதனை இலக்கியக் கோட்பாடு, ரசனை மற்றும் விமர்சன தளங்களில் பதிவுசெய்த படைப்பாளி மு.புஷ்பராஜன். ஆரவார இலக்கியச் சந்தையிலிருந்து வெகுதூரம் விலகி இருப்பவர். மு.தளையசிங்கம், ஏ.ஜே.கனகரட்னா ஆகியோரின் சூழலில் தன் சமூக இலக்கியப் பார்வையைச் செதுக்கிக்கொண்டவர். இந்நூலில் அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. புதிய திராட்சை இரசமும் பழைய சித்தையும், சங்காரம் இரு பார்வைகள், அதிகார ஆட்சியும் ஒரு நாவலும், லஜ்ஜா நாவலும் தஸ்லிமா நஸ்ரினும், நம்பிக்கைகளுக்கு அப்பால், கரோல்ட் பின்ரா, ஏஜே: சில நினைவுச் சிதறல்கள், சு.ரா., செழியன் கவிதைகள், பிறீடா: ஒரு துன்பியல் நாடகம், மக்டலின் சகோதரிகள், எம்.எஸ்.என்றொரு மீரா, மண்ணின் சாரம் செறிந்த கவிஞர் தா.இராமலிங்கம், யோபுவும் மாவோவும், சோகம் தோய்ந்த ஒரு கடலோரத்தின் வாழ்வுகள், ஜெயமோகனும் இயல்விருதும், லண்டன்: சீரிய நாடக அரங்க அளிக்கைகள்-சில அவதானங்கள், மூடிக் கிடக்கும் கதவுகளின் பின்னால், சிம்மாசனங்கள் இழந்த கடவுள்கள் ஆகிய 19 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 236450).