அ.மு.பாறூக். கொழும்பு 14: புரவலர் புத்தகப் பூங்கா, இல.25, அவ்வல் சாவியா வீதி, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2013. (கொழும்பு 11: எஸ்.என்.எம்.ஆர். கிராப்பிக்ஸ் ).
x, 72 பக்கம், விலை: ரூபா 270., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0195-12-1.
புரவலர் புத்தகப் பூங்காவின் 33ஆவது வெளியீடாக கிழக்கு மாகாணத்தின் மருதமுனையைச் சேர்ந்த அ.மு.பாறூக் எழுதிய பிறமொழிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. காலனாய் வந்த கனிகள் (ஆங்கில மூலம் ஜி.நேருஜா), பெண்மையின் சீற்றம் (ஆங்கில மூலம் புண்ணியகாந்த விஜயநாயக்க), மேஜர் தந்த பரிசு (ஆங்கில மூலம் ஏ.பார்த்தலோமியஸ்), சந்தன மரம் (ஆங்கில மூலம் பிரிஸ்ஸில்லாபெரெரா), தாகுரின் கிணறு (இந்தி மூலம் பிரேம்சந்த்), ராணி ஞானம் பெற்றாள் (ஆங்கில மூலம் சாவித்திரி உடவத்தை), இந்துமா (-), உண்மை வென்றது அவலட்சணம் அம்பலம் (ஆங்கில மூலம் போதிஸ்ரீ சாஸ்திரி), மீனா பீடி சுற்றிக்கொண்டிருக்கிறாள் (ஆங்கில மூலம் பாத்ராஜி மகிந்த ஜெயதிலக்க), தோல்வியின் மறுபக்கம் (ஆங்கில வடிவம் பி.எம்.ஜெயதிலக்க), வரட்சியும் வசந்தமும் (ஆங்கில மூலம் டி.எல்.சிறிமன்ன). இம்மொழிபெயர்ப்புகள் ஏற்கெனவே தினக்கதிர், தினக்குரல் ஆகிய இதழ்களில் வெளிவந்தவை. மனிதநேயமும் சமூக மேம்பாடும் இக்கதைகளில் முக்கியத்துவம் பெறுகின்றன.