மெரில் காரியவசம் (சிங்கள மூலம்), சின்னையா கனகமூர்த்தி (தமிழாக்கம்).கொழும்பு 7: சமூக, கலாசார ஒருங்கிணைப்பு அமைச்சு, 255 பௌத்தாலோக மாவத்தை, 1வது பதிப்பு, 1991. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்).
viii, 223 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
முன்னாள் பாராளுமன்ற அகலவத்தைத் தொகுதி மக்கள் பிரதிநிதியும், போதனா வைத்தியசாலைகள், மகளிர் விவகார பிரதி அமைச்சருமான வழக்குரைஞர் மெரில் காரியவசம் அவர்களால் சிங்களத்தில் எழுதப்பட்ட தருவன்கே கெதர சிங்கள நாவலின் தமிழாக்கம். நூலின் மொழிபெயர்ப்பாளரான நோர்வூட் சின்னையா கனகமூர்த்தி, சிவனொளிபாதமலைத் தொடரிலமைந்த வெஞ்சர் தோட்டத்தில் பிறந்தவர். மத்துகம மத்திய மகா வித்தியாலயம், ஹட்டன் ஹைலன்ட்ஸ் மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்விகற்று, மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர். தலவாக்கலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, ஆசிரியர் சேவைக்களப் பயிற்சிப் பிரிவு ஆகியவற்றில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மலையகச் சிறுகதைத் தொகுப்பான கதைக்கனிகள் என்ற நூலை சிங்களத்தில் மொழிபெயர்த்தவர் இவர்.(இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 202725).