ஆர்.ஆர்.சமரக்கோன் (சிங்கள மூலம்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழாக்கம்). கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கோ, 217 ஒல்கொட் மாவத்தை, 1வது பதிப்பு, 1992. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கொம்பனி அச்சகம், 217 ஒல்கொட் மாவத்தை).
xiv, 195 பக்கம், விலை: ரூபா 72.50, அளவு: 18×12 சமீ., ISBN: 955-21-0602-8.
1971ஆம் ஆண்டின் சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்ற “கே குருல்லோ” என்ற சிங்கள நாவலின் தமிழாக்கம். இந்நாவலில் கதாசிரியர், நந்தசேனவையும் அவரது மனைவி சுமனாவதியையும் குடும்பத் தலைவர்களாகவும் நான்கு பிள்ளைகளின் பெற்றோராகவும் சித்திரிக்கின்றார். பாசத்தையும் கடமையையும் கலந்தூட்டி வளர்த்து இருவரும் தம் பிள்ளைகளை ஆளாக்குகின்றார்கள். ஆனால் பிள்ளைகள் வளர்ந்ததும் பெற்றோரைக் கைவிடுகின்றனர்;. அவர்களது தாய்மை உணர்வுகளைக் காயப்படுத்துகின்றனர். ஐந்தறிவு சிட்டுக்குருவிகள் சிறகுமுளைத்ததும் கூட்டைவிட்டுப் பறந்து விடுகின்றன. ஆறறிவு மனிதக் குருவிகளும் அதையே செய்கின்றன. பிள்ளைகளினால் சுகம் காணாத பெற்றோரின் பாத்திரப்படைப்பு இந்நாவலின் அடிநாதமாகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 210344).