ஐ.தி.சம்பந்தன். லண்டன்: சுடரொளி வெளியீட்டுக் கழகம், 15 ருத்லண்ட் வீதி, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxiv, 211 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-0-9555359-9-4.
ஈழத்தமிழர்களின் சமூக, அரசியல், தொழிற்சங்க வரலாற்றுச் சுவடுகளைத் தேடிச் செல்லும் ஒரு ஆய்வாளனின் பார்வையில் ஐ.தி.சம்பந்தன் என்ற பெயர் இடைக்கிடையே சிக்கிக்கொள்ளும். தமிழரசுக்கட்சியின் அரசியல்களமாகட்டும், சன்சோனி உள்ளிட்ட இனப்பிரச்சினை தொடர்பான பல்வேறு ஆணைக்குழுக்களின் அறிக்கைகளாகட்டும், எரிந்துபோன யாழ்ப்பாணப் பொது நூலகத்தை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் தொடக்கப்பட்ட கொடித்தினப் பணிகளாகட்டும், ஆங்காங்கே இந்தப் பெயர் முக்கிய இடங்களில் எட்டிப்பார்க்கவே செய்யும். இவரது சமூக வாழ்வின் முக்கிய சில பக்கங்களை இந்த நூல்வழியாக சுயசரிதை வடிவில் ஐ.தி.சம்பந்தன் அவர்கள் வழங்கியிருக்கின்றார். தனது மனதில் இடம்கொண்டவர்கள் பற்றியும் ஆங்காங்கே அவர்களுடனான தனது தொடர்புகளையும் குறிப்பிடுகின்றார். இலங்கை, தமிழகம், புகலிடம் என இவரது தொடர்புகள் விரிந்துள்ளதை இந்நூல்வழியாகப் புலப்படுத்துகின்றார்.