க.சி.குலரத்தினம், திரு. வி.கலியாணசுந்தர முதலியார். பருத்தித்துறை: கதிரைவேற்பிள்ளை கலாமன்றம், கதிரைவேற்பிள்ளை வீதி, மேலைப் புலோலி, 1வது பதிப்பு, ஜுலை 1969. (கொழும்பு 13: இரஞ்சனா அச்சகம், 98, விவேகானந்தர் மேடு).
(6), 50 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18×12.5 சமீ.
தமிழறிஞர் நா.கதிரைவேற்பிள்ளை (1874-1907) யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் வந்து, தமிழ்ப்பணிக்கும் சைவப்பணிக்கும் தன்னை அர்ப்பணித்தவர். தமிழுக்கு அகராதியொன்றை தொகுத்து வழங்கியவர். இவரது சுப்பிரமணிய பராக்கிரமம் என்ற நூலின் அடிப்படையிலேயே பழநி தண்டாயுதபாணி கோயிலில் சித்திரங்கள் தீட்டப்பெற்றன. பல்வேறு தலபுராணங்களைப் பாடிய இவர் பின்னாளில் மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவராகவும் இருந்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தலைவராக புலவர் கா.கோவிந்தன் சேவையாற்றிய வேளையில், புகழ்பெற்ற பருத்தித்துறை மண்ணின் மைந்தன் செந்தமிழ்ச் செம்மல் நா.கதிரைவேற்பிள்ளை அவர்களுக்கு தமிழகத்தில் சிலை வைக்கும்; பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. அவ்வேளையில் கன்னித் தமிழ் வளர்த்த அவரை நினைவுகூர்ந்து இந்நூல் இலங்கையில் எழுதி வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 9065).