பாலசுப்பிரமணியம் பத்மநாதன். யாழ்ப்பாணம்: சித்திர பவனம், ஏழாலை வடக்கு, ஏழாலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2008. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).
v, 74 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22×14 சமீ.
பேராசிரியர்கள் க.கைலாசபதி, சு.வித்தியானந்தன், க.கணபதிப்பிள்ளை, ம.மு.உவைஸ், வி.செல்வநாயகம், சுவாமி விபுலாநந்தர், தனிநாயகம் அடிகள், ஆ.சதாசிவம் ஆகிய தமிழறிஞர்கள் பற்றிய விரிவான எட்டுக் கட்டுரைகளும், மேலும் 36 தமிழறிஞர் பற்றிய சிறு குறிப்புகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அவர்களுள் பாவலர் துரையப்பாபிள்ளை, சி.கணேசையர், ஆறுமுக நாவலர், அ.செ.முருகானந்தன், இளங்கீரன், வரதர் (தி.ச.வரதராசன்), சிவசம்புப் புலவர், மாதகல் மயில்வாகனப் புலவர், சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர், ஈழத்துப் பூதந்தேவனார், மங்களநாயகம் தம்பையா, கவிஞர் அப்துல் காதிர்லெப்பை, மஹாகவி து.உருத்திரமூர்த்தி, சித்திலெப்பை, சி.வை.தாமோதரம்பிள்ளை, வ.அ.இராசரத்தினம், இணுவைச் சின்னத்தம்பிப் புலவர், அருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர், இலங்கையர்கோன், சம்பந்தன், சி.வைத்தியலிங்கம், அரசகேசரி, நந்தி, புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, நவாலியூர் சோமசுந்தரப் புலவர், நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவர், யாழ்ப்பாணம் பதுறுதீன் புலவர், சி.வி.வேலுப்பிள்ளை, சில்லையூர் செல்வராசன், கே.டானியல், நீலாவணன், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, கே.கணேஷ், சுவாமி ஞானப்பிரகாசர், வித்துவான் கு.ஓ.ஊ.நடராசா, கவிஞர் எம்.சி.எம்.சுபைர் ஆகிய பெரியார்கள் இடம்பெற்றுள்ளனர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 200045).