ரேணுகா பிரதீபகுமார் (தொகுப்பாசிரியர்). இரத்மலானை: கலாநிதி ரேணுகா பிரதீப்குமார், பிரணவம், 23/4V, ரஜமாவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 2007. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
156 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 22.5×14.5 சமீ.
செங்கை ஆழியானின் மணிவிழா 25.1.2001 அன்று நடந்தவேளையில் மணிவிழா மலரை வெளியிடத் தடங்கல்கள் ஏற்பட்டிருந்தன. மணிவிழாவுக்கெனக் கட்டுரைகளைப் பெறாது, செங்கை ஆழியானின் பணிகள் குறித்துக் காலத்திற்குக் காலம் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து, 31.12.2006 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில், அவரது அகவை 65 பாராட்டு விழா நடைபெற்றவேளையில் இம்மலர் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு பிரமுகர்களின் பார்வையில் செங்கை ஆழியானுடைய வாழ்வும் பணிகளும் பதிவுசெய்யப்படுகின்றன. சு.வித்தியானந்தன், நா.சுப்பிரமணியம், கனக செந்திநாதன், எஸ்.பொன்னுத்துரை, அ.சண்முகதாஸ், கா.சிவத்தம்பி, டொமினிக் ஜீவா, சுந்தரம் டிவகலாலா, எஸ்.பத்மநாதன், அநு.வை.நாகராஜன், ஆ.கோகுலன், ஏ.ஜே.கனகரத்தினா, சிற்பி சிவசரவணபவன், பொ.பாலசுந்தரம்பிள்ளை, கே.எஸ்.சிவகுமாரன், எஸ்.எம்.ஜே.பைஸ்தீன், து.வைத்திலிங்கம், தி.வேலாயுதம்பிள்ளை, செ.சிவஞானசுந்தரம், சிரித்திரன் சுந்தர், எஸ்.சிவலிங்கராஜா, இ.பாலசுந்தரம், பொ.சண்முகநாதன், சோ.பத்மநாதன், ம.இரகுநாதன், சு.சபாரத்தினம், கே.சிவராஜா ஆகியோர் பாராட்டுரை வழங்கியவர்களாவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 184412).