எஸ்.வேல் அமுதன். தெல்லிப்பழை: வேல் வெளியீட்டகம், வல்லம்புலம் ஒழுங்கை, மாயெழு, குரும்பசிட்டி மேற்கு, 1வது பதிப்பு, நவம்பர் 2013. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
xxii, 150 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-50119-1-4.
2003ஆம் ஆண்டு முதல், ஓலை, ஞானம், செங்கதிர், தினக்குரல், மல்லிகை, ஜீவநதி, இணுவில் ஒலி, வீரகேசரி ஆகிய ஊடகங்களில் வெளிவந்த வேல் அமுதன் எழுதிய 75 குறுங்கதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. வேல் அமுதன் தனது 75ஆவது அகவையின் நினைவாக 75 கதைகளை இத்தொகுப்பில் திரட்டியிருக்கிறார். சங்கப்பலகை (நூலகம், 1948), இலங்கை அறிவு இயக்கம் (அறிவகம், 1970), தமிழ் கதைஞர் வட்டம் (தகவம், 1974), வள்ளுவர் மாமன்றம் (1983), வேல் வெளியீட்டகம் (வேகம், 1983), மதி கலைஞர் வட்டம் (மகவம், 1983), இளம் கலைஞர் வட்டம் (1983), வேல் அமுதன் திருமண ஆலோசனையகம் (1995) ஆகியவற்றின் பின்னணியில் இருந்து வந்த வேல் அமுதனின் இலக்கியப் பணி குறிப்பிடத்தகுந்தது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 234966).