நவாலியூர் நா.சச்சிதானந்தன். யாழ்ப்பாணம்: திருமதி சுகந்தகுமாரி யோகசுந்தரம், கந்தர்மடம், 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (ஏழாலை: மஹாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு).
xxxvii, 102 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 20.5×14.5 சமீ.
பல்துறை எழுத்தாளரான இந்நூலாசிரியர் அவ்வப்போது எழுதிப் பிரசுரமான தேர்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். The Metaphysics of Maha Sivarathri, The Erotic and the Ascetic, The acoustics of Yoga ஆகிய மூன்று ஆங்கிலக் கட்டுரைகளுடன், கணபதியே வருவாய், ஸங்கீதானந்தம், இராகம் தானம் பல்லவி, ஆன்மீகத்தின் ஆரம்பம் எங்கே? சோதிடத்துக்குள் ஒரு சூட்சுமம், உணர்ச்சி அலைகளைத் தோற்றுவிக்கும் இசை வடிவங்கள், நடிப்பும் நடனமும் சங்கீதமும் ஆன்மீகமும் இவை நாலுங்கலந்த கதகளி, கருணை, அறிதுயிலும் அனுபவமும், சத்தமெல்லாம் சங்கீதமாமோ, ஆகிய தமிழ்க் கட்டுரைகளுமாக மொத்தம் பன்னிரண்டு கட்டுரைகளும், அவற்றை எழுதப்பயன்படுத்திய நூல்களின் பட்டியலும், தமிழ் ஆங்கில பத்திரிகைகளில் வெளிவந்த இவரது கட்டுரைகளும், வானொலி ஒலிபரப்புகளும் பற்றிய பட்டியலொன்றும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 109491).