எ.எம்.எ.அஸீஸ். கொழும்பு: எ.எம்.எ.அஸீஸ், 1வது பதிப்பு, ஜனவரி 1968. (சென்னை 1: கமர்ஷியல் பிரின்டிங் அன்ட் பப்ளிஷிங் ஹவுஸ்).
(2), 200 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.
கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் கலந்துகொண்ட தமிழறிஞர் எ.எம்.எ.அஸீஸ் அவர்கள், பின்னர் தினகரன் பத்திரிகையில் தொடராக எழுதிவந்த 21 கட்டுரைகளின் தொகுப்பு. தமிழாராய்ச்சி மாநாடு பற்றிய பார்வைகளின் பதிவாகவும், நேர்முக வர்ணனையாகவும் இவை அமைகின்றன. சமூக சேவைகளினாலும் சிந்தனையினாலும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தப் பாடுபட்ட ஒருசில முஸ்லிம் தலைவர்களில் எ.எம்.எ.அஸீஸ் 20ம் நூற்றாண்டின் முக்கியமானவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 118854).