க.பரணீதரன், த.கலாமணி (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2011. (யாழ்ப்பாணம்: சதாபொன்ஸ்).
viii, 84 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.
ஜீவநதி வெளியீட்டு வரிசையில் ஆறாவது நூல். ஈழத்து இலக்கியத்தின் பல்துறைசார் அறிஞர்கள் பதினைந்துபேரின் நேர்காணல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. இந்நேர்காணல்களினூடாக சமகால கலை இலக்கிய விவகாரங்கள் குறித்து வினாக்கள் எழுப்பப்பட்டு பிரமுகர்களின் விரிவான கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. பேராசிரியர் சபா ஜெயராசா, கவிஞர் சேரன், பேராசிரியர் சி.மௌனகுரு, கவிஞர் சோ.பத்மநாதன், செங்கை ஆழியான், கல்வயல் வே.குமாரசுவாமி, தெணியான், பேராசிரியர் ம.இரகுநாதன், கே.எஸ்.சிவகுமாரன், அருட்திரு இராசேந்திரன் ஸ்ரலின், மேமன்கவி, யோகேஸ்வரி சிவப்பிரகாசம், அந்தனி ஜீவா, குறமகள், அஸ்மின் ஆகியோரின் நேர்காணல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 217962).