இ.பாலசுந்தரம் (மணிவிழா மலர் ஆசிரியர்). கனடா: மனுவல் ஜேசுதாசன் மணிவிழாக் குழு, 1வது பதிப்பு, மே 2008. (கனடா: ஜே.ஜே.பிரின்ட்).
(2), 84 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
தொன்னூறு நாட்களுள் என்ற நாவலின் ஆசிரியர் மனுவல் ஜேசுதாசன், ஆர்.என்.லோகேந்திரலிங்கம் மணிவிழா மலரின் மலராசிரியராகவும் பணியாற்றியவர். கனடாவில் ஸ்கார்பரோவில் வாழும் இப்படைப்பாளியின் மணிவிழாவை முன்னிட்டு இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. மணிவிழாக் குழுவில் திரு.பொ.கனகசபாபதி, கவிஞர் வி.கந்தவனம், திரு.கதிர் துரைசிங்கம், பேராசிரியர் இ.பாலசுந்தரம், திரு.ஆர்.என்.லோகேந்திரலிங்கம், திரு.எஸ்.ஜே.சோதி, திரு.வே.இந்திரசிகாமணி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 6331).