ரீ.எல். ஜவ்பர்கான். காத்தான்குடி: இலக்கியக் கழகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (ஓட்டமாவடி: கோல்மாஸ்டர் அச்சகம், எம்.பீ.சீ.எஸ்.வீதி).
100 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 19.5×13 சமீ., ISBN: 978-955-50740-0-1.
சுனாமி தின்ற உயிர்களுக்குக் காணிக்கையாக்கப்பட்டுள்ள இக்காவிய நூல், அலைகளாய் பொங்கிய அழிவுகள், உடல்களால் நிரம்பிய மருத்துவமனைகள், உதவிப்பணியில் உள்ளங்கள் இணைவு, பாகுபாடின்றிப் பதறிய உயிர், உதவிக்காய் குவிந்துவந்த உலக நிறுவனங்கள், அகதிகளாய் பெருக்கெடுத்த அப்பாவிகள், நிர்க்கதியோர் மகிழ நிவாரண வருகை, ஆண்டுகள் மூன்று அகன்று புதிய வாழ்க்கை, நிர்க்கதியோருக்கு நிரந்தரத் தொழில்கள், நிரந்தர வீடுகள் நிர்மாணம் ஆகிய 10 தலைப்புகளில் பாடப்பெற்றுள்ளது. 2004 மார்கழியின் ஆழி அலை அழிவுகளின் அவலங்கள் புகைப்படங்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.