9784 பாரத நவமணிகள்.

சி.கணபதிப்பிள்ளை. சாவகச்சேரி: செந்தமிழ் மன்ற வெளியீடு, சைவாசிரிய கலாசாலைப் பழைய மாணவர்கள், தென்மராட்சி, கொடிகாமம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1959. (யாழ்ப்பாணம்: அர்ச். பிலோமினா அச்சகம், 102, பெரிய தெரு).

94 பக்கம், விலை: ரூபா 1.75., அளவு: 18×12.5 சமீ.

பாரத நவமணிகள்.

சி.கணபதிப்பிள்ளை. சாவகச்சேரி: செந்தமிழ் மன்ற வெளியீடு, தென்மராட்சி, கொடிகாமம், 2வது பதிப்பு, ஒக்டோபர் 1980, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1959. (யாழ்ப்பாணம்: திருக்கணித அச்சகம், சாவகச்சேரி).

(7), 84 பக்கம், தகடு, விலை: ரூபா 6.00., அளவு: 18×12.5 சமீ.

பண்டிதமணியின் தென்மராட்சிச் சீடர்களான  மாணவர்களால், அவரது தமிழ்ப் படைப்புகளை நூல்வடிவில் வெளியிடும் நோக்கோடு 1959இல் உருவாக்கப்பட்ட அமைப்பே செந்தமிழ் மன்றமாகும். அவர்களது  முதற்படைப்பாகிய  இந்நூல் பண்டிதமணியின் கட்டுரைகளுடன் 28.8.1959இல் வெளியிடப்பட்டது.  மகாபாரதம், வில்லி பாரதம், கண்ணன் காட்டும் வழி, மந்திராலோசனை, கண்ணன் சூழ்ச்சி, கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம், தரும வேறுபாடு, தருமத்தின் இன்றியமையாமை, கீதாபோதம் ஆகிய ஒன்பது உரைகள் இதில் அடங்குகின்றன. இந்நூலில் இடம்பெற்றுள்ள முதல் ஐந்து கட்டுரைகளும்  இலங்கை வானொலி உரைகளாகும்.

ஏனைய பதிவுகள்