வாகரைவாணன் (இயற்பெயர்: ம.அரியரத்தினம்). நாவற்குடா: வாகரைவாணன், ஆரணியகம், 479/3, புதிய கல்முனை வீதி, 1வது பதிப்பு, புரட்டாதி 2001. (மட்டக்களப்பு: ஜெஸ்கொம் ஓப்செற் அச்சகம், இல.1, யேசு சபை வீதி).
iv, 52 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 20.5×15 சமீ.
1971இன் ஆரம்பத்தில் தனது முதல் கவிதை நூலைத் தமிழகத்தில் வெளியிட்ட வாகரைவாணன் இதுவரை முப்பதுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். எந்தவிதத் தத்துவக் கோட்பாடுகளுக்குள்ளும் தன்னைத் தள்ளிவிடாமல் தனி ஒருவராக சுதந்திரமான சிந்தனைகளோடு இலக்கியப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வாகரைவாணன் சிறுவர் இலக்கியத்துக்கான (சின்னச் சின்னப் பூக்கள்) இலங்கை அரசின் சாகித்திய விருதினை 1998இலும், கவிதைக்கான வடகிழக்கு மாகாண சபையின் விருதினை மட்டக்களப்புக் காவியம் என்ற நூலுக்காக 2001இலும் பெற்றுக்கொண்டவர்.இவரது மூன்று நூல்கள் (பாலர் தமிழ்ப்பாட்டு, அருளாளர் அந்தோனியார், கிறிஸ்து காவியம்) யாழ் இலக்கியப் பேரவையின் பரிசைப் பெற்றுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில், வாகரையைப் பிறப்பிடமாகக் கொண்ட வாகரைவாணன், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் வித்துவானும், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் ஓய்வுபெற்ற தமிழாசிரியருமாவார். ஆய் தமிழ் என்ற இந்நூல் வாகரைவாணனின் இலக்கிய ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பாகும்.