கே.எஸ்.சிவகுமாரன். கொழும்பு 6: மீரா பதிப்பகம், 291/6, 5/3ஏ, எட்வேர்ட் அவென்யு, 1வது பதிப்பு, மார்ச் 2013. (மஹரகம: தரஞ்சி பிரின்ட்ஸ், நாவின்ன).
xiv, 234 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 18.5×12 சமீ., ISBN: 978-955-53921-5-0.
1996 வைகாசியில் புதிய பயணம் என்ற தனது நூலுடன் மீரா பதிப்பகத்தை தொடக்கிவைத்தவர் புலோலியூர் இரத்தினவேலோன். காலக்கிரமத்தில் பதிப்புத்துறையில் தீவிர வளர்ச்சிகண்ட கொழும்பு, மீரா பதிப்பகம் தனது நூறாவது நூலாக இதனை வெளியிட்டுள்ளது. கடந்த ஐந்து அல்லது ஆறு தசாப்தங்களுக்கு முன்னதான கே.எஸ்.சிவகுமாரனின் திறனாய்வுப் பார்வையை இந்நூல் பதிவுசெய்கின்றது. இலக்கியம், திரைப்படம், நாடகம், தொடர்பாடல் எனப் பல்வேறு துறைகளிலும் இத்திறனாய்வுப் பார்வை அகலித்துச் சென்றுள்ளதை இந்நூலில் உள்ள கட்டுரைகளை வாசிப்போர் புரிந்துகொள்ளலாம்.