சி.குமாரலிங்கம். யாழ்ப்பாணம்: சி.குமாரலிங்கம், 149, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். பிரின்டர்ஸ், 21, சட்டநாதர் வீதி, நல்லூர்).
(6), vi, 42 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 ச.மீ., ISBN: 978-955-51477-4-3.
22 வருடங்களில் 37 நாடகங்களை எழுதிய ஷேக்ஸ்பியர், 154 சொனட் (Sonnet) கவிதைகளையும் எழுதியிருக்கிறார். இத்தாலியில் 13ம் நூற்றாண்டில் அறிமுகமான இக்கவிதைவடிவம் பின்னர் ஐரோப்பாவெங்கும் பரவியது. ஷேக்ஸ்பியரின் கவிதைகளில் இடம்பெற்றுள்ள பல சொற்கள் இன்று வழக்கொழிந்துவிட்டன. ஷேக்ஸ்பியர் எழுதிய கவிதைகளின் மொழிபெயர்ப்பாக இந்நூல் அமைகின்றது. தனது நண்பன் ஒருவனையும், அவன் காதலித்த கறுப்பினப் பெண்ணையும்; பற்றி இக்கவிதைகள் பேசுகின்றன. மனிதநேயம், சமூகநீதி, மனோதத்துவம், இயற்கை, சூழல் என்பன பற்றியும், சுற்றுச் சூழல் மனிதனின் அற்ப ஆசைகளுக்காக மாசுபடுத்தப்படுவதையும் தன் கவிதைகளிலே அழகாக விபரிக்கிறார். வங்கி மேலாளரான சி.குமாரலிங்கம், இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்ட முற்போக்குச் சிந்தனையாளர்.