9364 வல்வை ச.வயித்தியலிங்கம் இயற்றிய சிந்தாமணி நிகண்டு: மூலமும் உரையும்.

ச.வயித்தியலிங்கம் (மூலம்), பா.மீனாட்சிசந்தரம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, மீள்பதிப்பு, 2013, 1வது பதிப்பு, 1876. (கொழும்பு 13: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ் பிரின்டர்ஸ், 94 பரமானந்த விகாரை மாவத்தை).

iv, 142  பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ.

அகராதி என்பது நவீன யுகத்திலேயே  மேலைத்தேய வழிவந்து தமிழுக்கு அறிமுகமானது. அதற்கு முன்பு அகராதியின் பணியை செய்யுள் உருவிலமைந்த  நிகண்டுகளே நிறைவேற்றிவந்தன. தமிழ் அகராதித் துறையில் முன்னோடியானவையும் காத்திரமானவையுமான பல முயற்சிகளில் ஈடுபட்டவர்களாக ஈழத்தவர்கள் இருந்துள்ளனர் என்பதற்கு இந்த நிகண்டு ஆதாரமாகின்றது. ஆறுமுக நாவலரின் சமகாலத்தவரும், அவரையொத்த தமிழ்ப் பணிகளில் ஆளுமையோடு ஈடுபட்டு உழைத்தவருமான வல்வெட்டித்துறை ச.வைத்தியலிங்கம் அவர்களால் இந்நிகண்டு ஆக்கப்பெற்றது. உலகளாவியரீதியில் தமிழ் மொழியில் இதுவரை 35 நிகண்டுகள் வரை கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றாக சிந்தாமணி நிகண்டும் அமைந்துள்ளது. இந்நூலின் பதிப்பாசிரியர் பா.மீனாட்சிசுந்தரம், வல்வெட்டித்துறை அரும்பொருள் காப்பகத்தின் காப்பாளராவார். இந்நூலின் மூலப்பதிப்பு, சென்னை தண்டையார்பேட்டை பு.சு.கிருஷ்ணசாமிப்பிள்ளையவர்களால், இலட்சுமி விலாச அச்சுக்கூடத்தில்  தாது வருடம் (1876) சித்திரை மாதம் பதிப்பிக்கப்பட்டது.

ஏனைய பதிவுகள்

Happy Larry’s Lobstermania

Posts Fortunate Larrys Lobstermania dos Position Is very Popular Certainly United kingdom Players Appreciate Fun Slot Has Better casinos to possess Lobstermania ports In the