கே.வி.குணசேகரம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 600004: Sri Murugan Offset).
xx, 280 பக்கம், விலை: இந்திய ரூபா 75., அளவு: 18×12.5 சமீ.
ஆசிரியர், கல்வியாளர், என்ற ஆளுமைக்கு அப்பால் படைப்பிலக்கியத்துறையிலும் தன் தடம்பதித்துவரும் நூலாசிரியர் கந்தர் வைத்திலிங்கம் குணசேகரம் நல்லூர் கோட்டக் கல்விப் பணிப்பாளராகப்; பணியாற்றுகிறார். தமிழர்களின் வாழ்வியல் நூலாகிய திருக்குறளில் உள்ள 1330 குறள் பாக்களுக்கும் பொருத்தமான விளக்கமளிக்கும் வகையில் சிறுகதைகளை எழுதவேண்டும் என்ற முனைப்பில் உருவான பல தொகுதிகளுள் இதுவும் ஒன்றாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 166064).