கம்பராமாயணம்: வாலி வதைப்படலம். சரஸ்வதி சிவலிங்கராஜா. யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, 148/1, ஸ்ரான்லி வீதி, 2வது பதிப்பு, தை 1990, 1வது பதிப்பு, ஆனி 1988. (யாழ்ப்பாணம்: முல்லை அச்சகம், 51, இரண்டாம் குறுக்குத் தெரு).
72 பக்கம், விலை: ரூபா 24.50, அளவு: 21×14 சமீ.
இந்நூல் சிலப்பதிகாரத்தில் வரும் கடலாடு காதை, கானல்வரி ஆகிய பகுதிச் செய்யுள்களின் உரைக் குறிப்புகளையும், கம்;பராமாயணத்தில் வாலி வதைப்படலப் பகுதிச் செய்யுள்களையும் அவற்றுக்கான உரைக்குறிப்புகளையும் அரும்பொருள் அகராதிப் பிரிவுடன் வழங்குகின்றது. இந்நூல் பட்டப்படிப்பு மாணவர்களின் தமிழ் இலக்கியப் பாடத்திற்கான உதவி நூலாக வெளியிடப்பட்டுள்ளது. திருமதி சரஸ்வதி சிவலிங்கராஜா மானிப்பாய் உடுவில் மகளிர் கல்லூரியின் தமிழாசிரியையாவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 85323).