9814 படைப்பின் கதவுகள்: இலக்கியக் கட்டுரைகள்.

த.அஜந்தகுமார். கரவெட்டி: புதிய தரிசனம், வதிரி, 1வது பதிப்பு, ஐப்பசி 2013. (கரவெட்டி: தமிழ்ப் பூங்கா, நெல்லியடி).

vi, 126 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-53043-7-5.

சிறுகதைகள் பற்றிய பார்வைகள், படைப்பு-படைப்பாளி-விமர்சனம், பொது ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ்  எழுதப்பட்ட 26 இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். உதயன் பத்திரிகையின் ஞாயிறு  சூரியகாந்தியில் ஒரு சோம்பேறியின் பக்கம் என்ற தலைப்பில் 2012-2013 காலகட்டத்தில் எழுதப்பட்டவையும், ஜீவநதி சஞ்சிகைக்காக எழுதப்பட்டவையுமான கட்டுரைகள் இவை. ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சூழலில் பல்துறைப் படைப்பாளியாக அறியப்பட்ட  தருமராசா அஜந்தகுமார், தனித்துத் தெரியும் திசை என்ற ஆய்வு நூலையும்,  ஒரு சோம்பேறியின் கடல் என்ற கவிதைத் தொகுதியையும் முன்னர் வெளியிட்டவர்.

ஏனைய பதிவுகள்